அரியானா சைபர் மோசடி நபரிடம் 19 கிலோ தங்கம் பறிமுதல்!!
19 kg gold seized from Ariana cyber fraudster
வெளிநாட்டு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இந்தியர்களை ஏமாற்றி கோடி கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறது. அதை தடுப்பதற்காக அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்த நிலையில் அரியானாவை சேர்ந்த புனித குமார்க்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது, அவர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபட்டதும் ஹாவாள முறையில் மாற்று தொழில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
புனித குமார் நண்பர்கள் மற்றும் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 8 கிலோ தங்க கட்டிகள் 75 லட்சம் ரொக்கம் நகைகள்,மெஸ்சிடிஎஸ்,ஆடிஉள்ளிட்ட பல சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி அன்று புனித் குமாரை டெல்லி விமான நிலையத்தில் கைது செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. பின்னர் புனித்குமார் வங்கியில் தனது தாய் பெயரில் வைத்திருந்த 19.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட புனித் குமாரை மேலும் விசாரிக்கணக்காக அமலாக்கத்துறை 12 நாள் காவல் எடுத்துள்ளது.
English Summary
19 kg gold seized from Ariana cyber fraudster