நியூசிலாந்தை தொடர்ந்து நெதர்லாந்தில் துப்பாக்கி சூடு! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்தை தொடர்ந்து நெதர்லாந்தின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் பயணித்து கொண்டிருந்த பயணிகள் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வந்துள்ளது.

இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி காலை 10.45 நடந்துள்ளது. இதனால் அப்பகுதிகள் அச்சத்திலும், பதற்றத்தில் உள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக, நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இரண்டு நாட்கள்  அங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அந்த நாட்டு நேரப்படி மதியம் 1.45 மணிக்கு மசூதி அருகே பயங்கர சத்தத்துடன் துப்பாக்கியால் சராமாரியாக சுடும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.

அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சம்பவம். மேலும், அங்கு நடந்த சம்பவம் ஒரு இனவெறி தாக்குதல் என்று நியூசிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். 

அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

netherland gun shoot


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->