திடீரென தீப்பற்றி எரிந்த வீடு., மேல் மாடியில் இருந்த 10 மாத குழந்தை.! எந்திரன் பட காட்சியை மிஞ்சும் வகையில்., குழந்தையை காப்பாற்றிய தந்தைக்கு நேர்ந்த சோகம்.!!  - Seithipunal
Seithipunal


பிரிட்டிஷ் நாட்டில் இருக்கும் ஸ்கட்லாந்து நகரில் வசித்து வருபவர் நீல் தாம்சன் (வயது 35). இவரது மனைவியின் பெயர் நடாலி (வயது 31). இவர்கள் இருவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். 

இவர்களின் அனைவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில்., கடந்த சனிக்கிழமையன்று இவர்களின் இல்லத்தில் திடீரென தீயானது பற்றி எரிய துவங்கியுள்ளது. இதனை கவனித்த தாம்சனின் மனைவி நடாலி முதல் தளத்தில் இருக்கும் ஜன்னலின் வழியாக கீழே குதித்தார். 

தீ எறிந்த அதிர்ச்சியில் கீழே குதித்த அவருக்கு தனது குழந்தைகள் மேல் தளத்தில் இருக்கும் மெத்தையில் உறங்கிக்கொண்டு இருக்கின்றனர் என்ற நியாபகம் வந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் குறித்து கணவரிடம் தெரிவித்துள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நீல் தாம்சன் சுதாரிப்பதற்குள்., வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிய துவங்கியுள்ளது. தனது குழந்தைகளை நினைத்து தீ எரிந்து கொண்டு இருந்த இல்லத்திற்குள் விரைந்து குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியே வந்துள்ளார். 

குழந்தைகளையே பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டு நிலை குலைந்து விழுந்த அவரை கண்டு அதிர்ந்து போன மனைவி., முன்னதாகவே காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கும்., அவசர ஊர்தியினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதால்., விரைந்த குழுவினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

மருத்துவர்கள் மேற்கொண்ட தீவிர சிகிச்சையில் உயிர் பெற்று ஆபத்தான நிலையில் இருந்த அவர் பரிதாபக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த மனைவி மற்றும் குழந்தைகள் கதறியழுத்தனர். மேலும்., அவர் காப்பாற்றிய குழந்தையில் 10 மாத குழந்தையும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in British a dad died when house fire to rescue her child


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->