தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!  - Seithipunal
Seithipunal


தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ அடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று முதல் 29.4.2024 வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிக்குகளில் வறண்ட வானிலை நிலவும். 

இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 36- 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27-28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu weather report 26042024


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->