தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில், மழை பெய்யப்போகும் மாவட்டங்கள்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்த வருடத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் தொடங்கி, வழக்கத்தை விட அதிகமான அளவிற்கு பருவமழை பெய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்து, அறிவிப்புகள் வெளியான நிலையில், வங்கக்கடலில் உருவான கஜா புயலின் காரணமாக 12 மாவட்டங்கள் சிதைந்தது. 

இன்றோடு வடகிழக்கு பருவமழையானது நிறைவுபெற்ற நிலையில்., தமிழகத்தில் வழக்கத்தை விட 24 விழுக்காடு குறைவான மழையும், சென்னையில் 50 விழுக்காடு அளவிற்கு குறைவான மழையும் பெய்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான பனியானது பெய்து வருகிறது. 

இந்நிலையில், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain in tamil nadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->