திருவண்ணாமலை || பங்க் மேனேஜரை அரிவாளால் வெட்டிய இளைஞர்கள் - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் வழியில் உள்ள ஓம்சக்தி நகரில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பங்கில் நேற்று இரவு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளனர்.

இதையடுத்து பெட்ரோல் பம்பு ஆபரேட்டர் பணம் கேட்டதற்கு, அந்த 4 பேரும் பணத்தை இவர் கொடுப்பார், அவர் கொடுப்பார் என்று மாறி, மாறி கூறியுள்ளனர். இதனால், அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

உடனே பங்க் மேனேஜர் ரகுராமன், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேனேஜரை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

ஆனால் அடுத்த முப்பது நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு அரிவாளுடன் வந்த இளைஞர்கள், மேனேஜர் ரகுராமனை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பித்துச் சென்றனர். இந்தத் தாக்குதலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பங்க் ஊழியர்கள் உடனடியாக மேனேஜரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சிசிடிவி காட்சியைக் கைப்பற்றி தப்பியோடிய இளைஞர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youths attack petrol bunk manager in tiruvannamalai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->