15 வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் - வாலிபர் போக்சோவில் கைது - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (25). இவர் வெல்டிங் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில் விஸ்வநாதன் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று சிறுமியை கடத்திச் சென்று அதே பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சிறுமியை, நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற விஸ்வநாதன், அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமியை குடியாத்தம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்த விஸ்வநாதன், சிறுமியை பேருந்து நிலையத்திலேயே தவிக்கவிட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியை மீட்ட பெற்றோர், உடனடியாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையறிந்த விஸ்வநாதன் தலைமறைவானார். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த விஸ்வநாதன் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for kidnapped and raped a 15 year old girl in Vellore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->