ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!
ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காந்தல்வாடி கிராமத்தில் வசித்து வருகிற பரசுராமன் (வயது 28). டிராக்டர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி விட்டது. இவரது மாமியார் வீடு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தில் உள்ளது. அங்கு பரசுராமன் பணி காரணமாக அடிக்கடி சென்று வருவார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கனிமொழி (வயது 26) என்ற இளம் பெண்ணுக்கும், பரசுராமனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பரசுராமன், கனிமொழியிடம் ஆசைவார்த்தை கூறி அவருடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் கனிமொழி கர்ப்பமானார். அவர் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் கனிமொழியை சந்தித்து பேசுவதை பரசுராமன் தவிர்த்து விட்டார். இது குறித்து கனிமொழி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்குப்பதிவு செய்து பரசுராமனை கைது செய்தார்.