குடித்துவிட்டு வந்த கணவன்..! பதிலுக்கு மனைவியும் மகளும் குடித்ததால் வந்த விபரீதம்..!! இன்னும் என்னெல்லாம் தமிழகத்தில் நடக்க போகிறதோ இந்த மதுவால்..!!!
குடித்துவிட்டு வந்த கணவன்..! பதிலுக்கு மனைவியும் மகளும் குடித்ததால் வந்த விபரீதம்..!! இன்னும் என்னெல்லாம் நடக்க போகிறதோ இந்த மதுவால்..!!!
குடிமகன்கள் தள்ளாடினால் தான், தமிழக அரசு ஸ்டெடியாக இருக்கும் போல. அதனால், மதுவிலக்கை அமல் படுத்துகிறோம், என்று கூறிக் கொண்டே, ஒரு பக்கம் ஒரு மதுக்கடையை மூடினால், மற்றொரு பக்கம், இரண்டு கடைகளைத் திறந்து வைக்கிறது, அரசாங்கம், என்ற குற்றச்சாட்டு, பொது மக்களிடையே அதிகமாகப் பரவி வருகிறது.
இந்த மதுவால், அனு தினமும், எத்தனையோ குடும்பங்கள் அழந்து கொண்டிருக்கின்றன, என்பது தான் வேதனையான செய்தியாக இருக்கிறது.
ராமநாதபுரம் கழுவூரணி அருகே உள்ள சடையன்வலசை என்ற கிராமத்தைச் சேரந்தவர் மகேந்திரன் ( வயது 42 ). இவரது மனைவியின் பெயர் முத்துமாரி (வயது 33) மகள் திவ்யா (வயது 7). மகன் தினேஷ் (வயது 4).
மகேந்திரன் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் குடித்து விட்டு வந்து, மனைவி முத்துமாரியிடம் தகராறு செய்து வந்தார். இதனால், முத்துமாரி மனம் உடைந்தார்.
இப்படி மகேந்திரன் குடித்து விட்டு தகராறு செய்வது தொடர் கதையானது. இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த முத்துமாரி, நேற்று தனது மகள் திவ்யாவிற்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷம் குடித்து மயங்கி கிடந்தரர்.
இதைக் கண்டு, பதற்றம் அடைந்த அவரது உறவினர்கள், அவரையும், அவர் மகள் திவ்யாவையும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்து டாக்டர்கள், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
WIFE AND DAUGHTER ATTEMPT SUICIDE