தேர்தலை புறக்கணிக்க வேங்கைவயல் மக்கள் முடிவு.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் உபயோகித்து வந்த குடிநீர் மேல்நிலை தொட்டியில் மலம் கடந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையில் தற்போது வரை குற்றவாளிகள் குறித்தான இயந்த ஆதாரமும் சிக்கவில்லை. சம்பந்தப்பட்ட கிராம மக்களையே சிபிசிஐடி அதிகாரிகள் குற்றவாளிகள் போல் நடத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இத்தகைய சூழலில் எதிர்வரும் மக்களவை பொது தேர்தலை வேங்கைவையல் கிராம மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். குடிநீர் தொட்டியில் மனிதக்கடவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால் வருகின்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் பதாகை வைத்துள்ளனர். அந்த பதவி தொடர்பாக கிராம மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vengaivayal people announced boycott loksabha election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->