திருவள்ளூர் அருகே பரபரப்பு.. வேட்பாளர்கள் கூட்டத்தில் கல்வீச்சு - 2 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சியில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில், 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தண்டவாளம் அருகே இருந்து மர்ம நபர்கள் இருவர் திடீரென கூட்டத்தில் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தது தாக்குதலில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுபிஸ் மற்றும் பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உடனடியாக அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples injured for mysterious boys attack in ntk candidate intro meeting tiruvallur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->