திருவள்ளூரில் தபால் வாக்குகளில் குளறுபடி.. பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் தபால் ஒர்க் வாக்குகளை செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.  திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியக்கூடிய அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் ஆவணங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. 

தபால் வாக்களிப்பதற்கு இதுவரை இரு முறை மனு அளித்தோம் தபால் வாக்கு செலுத்தவில்லை என மீண்டும் மனு அளித்துள்ளதாகவும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர். 

தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருக்கும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தபால் வாக்கு செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் கடிதம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trouble in postal vote in Thiruvallur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->