மாணவிகள் ரோட்டில் கூட நிற்கமுடியவில்லை!. கல்லூரி மாணவியை பேரூந்துநிலையத்தில் வைத்து செய்த கொடுமை!.
பேரூந்துநிலையத்தில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், குளச்சல் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்தநிலையில் எப்போதும்போல் கல்லூரிக்கு சென்றிருந்தார் அந்த மாணவி. மாலையில் கல்லூரி முடிந்ததும் வீடு திரும்புவதற்காக தனது தோழியுடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, மாணவியுடன் அதே கல்லூரியில் படித்து வரும் வெள்ளிச்சந்தை அருகே செதுவூர் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மாணவியை கேலி, கிண்டல் செய்ததுடன் திடீரென நடுரோட்டில் வைத்து பாலியல் சித்ரவதை செய்தனர்.
இந்த சம்பவதில் அந்த மாணவியை கீழே தள்ளிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அந்த மாணவி மயங்கி கீழே விழுந்தார். இதை தட்டிக்கேட்ட அந்த மனைவியின் தோழியையும் அவர்கள் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
பாலியல் கொடுமைக்கு ஆளானதில் படுகாயமடைந்த அந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் செய்தார்.
அதன் பேரில் 3 இளைஞர்கள் பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடினர். மூவரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பேரூந்துநிலையத்தில் 3 கல்லூரி மாணவர்களிடம் சிக்கி, மாணவி பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
The brutality of college student at bus stop.