தமிழை வளர்த்தீர்களா? கனிமொழியை தானே வளர்த்தீர்கள்? ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை!!  - Seithipunal
Seithipunal


பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம்,"  பிரதமர் மோடி நாட்டின் நலனுக்காகவே 24 மணி நேரமும் கடந்த 5 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். அவர் தலைமையில் நாடு பாதுகாப்பாக உள்ளது.  

பாஜக அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரமும் வழங்கி வருகிறது. இதற்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இடைத்தரகர்கள் இல்லை. 

அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக மத்திய அரசு செலுத்துகிறது. லஞ்சம், ஊழல் போன்றவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்றது. அதுபோல மோடி ஆட்சியில் ஒரு ஊழலை கூற முடியுமா?

தமிழகத்தை 5 முறை ஆண்ட திமுக ஏன் தமிழை வளர்க்கவில்லை. கனிமொழியை தானே வளர்த்தீர்கள்? தமிழ்மொழி ஏன் வழக்காடு மன்றத்தில் இல்லை என ஸ்டாலின் கேட்பது முறையல்ல" என அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilisai revenge to stalin


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->