தமிழை வளர்த்தீர்களா? கனிமொழியை தானே வளர்த்தீர்கள்? ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை!!
Tamilisai revenge to stalin
பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம்," பிரதமர் மோடி நாட்டின் நலனுக்காகவே 24 மணி நேரமும் கடந்த 5 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். அவர் தலைமையில் நாடு பாதுகாப்பாக உள்ளது.
பாஜக அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரமும் வழங்கி வருகிறது. இதற்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இடைத்தரகர்கள் இல்லை.
அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக மத்திய அரசு செலுத்துகிறது. லஞ்சம், ஊழல் போன்றவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்றது. அதுபோல மோடி ஆட்சியில் ஒரு ஊழலை கூற முடியுமா?
தமிழகத்தை 5 முறை ஆண்ட திமுக ஏன் தமிழை வளர்க்கவில்லை. கனிமொழியை தானே வளர்த்தீர்கள்? தமிழ்மொழி ஏன் வழக்காடு மன்றத்தில் இல்லை என ஸ்டாலின் கேட்பது முறையல்ல" என அவர் கூறியுள்ளார்.
English Summary
Tamilisai revenge to stalin