தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை.!
Tamil Nadu 19 districts Yellow alert
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது.
இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விரித்துள்ளது. இந்நிலையில்,
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu 19 districts Yellow alert