காவல் நிலையம் முன்பாக தீக்குளிக்க முயன்ற வி.ஏ.ஓ…! காரணம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள, எஸ். புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டுக்குடிப்பட்டி ஊராட்சியில் ராஜலட்சுமி என்பவர் வி.ஏ.ஓ-வாகப் பணி புரிந்து வருகிறார்.

இவர் அலுவலகத்திற்கு, சரியாக வருவதில்லை என்றும், கிராம மக்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வதாகவும், ஏற்கனவே, இவர் மீது புகார் அளிக்கப் பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், இவரைப் பார்க்க அலுவலகத்திற்கு வந்திருந்தனர். ஆனால், இவர் அலுவலகத்திற்கு, தாமதமாக வந்ததால், அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த  துணை தாசில்தார் கமலக்கண்ணன், எஸ்.ஐ. ரத்தினவேல், ஆகியோர், ராஜலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பிறகு தான் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், தன்னை அரசுப் பணி செய்ய விடாமல் தடுப்பதாக, ராஜலட்சுமி, கட்டுக்குடிபட்டியைச் சேர்ந்த, செந்தில்குமார், முத்துகிருஷ்ணன், இளங்கோ ஆகியோர் மீது, உலகம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின், வெளியே வந்த அவர், தனது டூ வீலரில் வைத்திருந்த மண்ணெண்ணையைத் தன் மீது ஊற்றினார். இதைக் கண்ட, அக்கம் பக்கத்தினர், அவர் மீது தண்ணீர் ஊற்றி, அவரை ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suicide attempt before the police station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->