வேலூர்: ஆன்லைன் விளையாட்டால் பள்ளி மாணவன் தற்கொலை.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் பெரிய பாலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமு என்ற 14 வயது மாணவன் கைப்பேசி மூலம் ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்து அதில் மூழ்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று (செப்.31) வழக்கம்போல ஆன்லைன் விளையாட்டை விளையாடிய தாமு அதில் தோல்வியடைந்ததாக தெரியவருகிறது. இதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த தாமு நேற்று இரவு வீட்டின் மாடியில் பிளேடால் கழுத்தை அறுத்த தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தத வேலூர் கிராமிய போலீசார் தாமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student commits suicide after losing online game in Vellore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->