இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் அட்டூழியம்: நாகை மீனவர்கள் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாகை, ஆற்காட்டு பகுதியில் இருந்து ராமன், பொண்ணுதுறைக்கு சொந்தமான 2 படகுகளில் சென்ற 5 மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். 

கோடியகரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

மேலும் மீன், நண்டு, ஜிபிஎஸ் கருவி, செல்ஃபோன் போன்றவற்றை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்நிலையில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் நாகை மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan pirates attacked Nagai fishermen


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->