ஸ்டாலின் பேசுவது, எனக்கு சாத்தன் வேதம் ஓதுவது போல் உள்ளது!! அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!! - Seithipunal
Seithipunal


மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு," திமுக தலைவர் ஸ்டாலின் ஊழல் பற்றி பேசுவது, சாத்தன் வேதம் ஓதுவது போல் உள்ளது. முதலமைச்சர் எடப்பாடியும், மற்ற அமைச்சர்களும் சிறப்பாக்க பணியாற்றி வருகிறோம். 

திமுகவினர் மீது தான் அதிகப்படியான ஊழல் வழக்குகள் உள்ளது. மேலும், திருடுபவர்களும், மக்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும் யார் என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். யார் சிறைக்கு செய்வார்கள் என்று கூடிய விரைவில் தெரியும். 

மேலும், செந்தில் பாலாஜி ஒரு வெளிப்படையான பச்சோந்தி, அவரது கருத்துக்களை எல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை. தற்சமயம் பாராளுமன்ற கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை. தேர்தல் வியூகங்கள் வகுத்து பணியாற்றுகின்றோம். குறித்த நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிக்க உள்ளோம். 

கூட்டணி பற்றிய முடிவை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் அவர்கள் தான் அறிவிக்க வேண்டும். அதிகாரபூர்வ தகவல் வரும் வரை வதந்திகளை பரப்புவதை நம்ப வேண்டாம்" என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sellur raju said about stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->