ஈரோட்டில் சோகம் - ஆணவக் கொலையில் 10 ஆம் வகுப்பு மாணவி பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டூரை சேர்ந்த சுபாஷ் என்பவர் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது தங்கை ஹாசினியை பள்ளியில் விடுவதற்காக நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேகமாக வந்த வேன் அவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டதால் பலத்தைக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். 

அதில், சுபாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் மஞ்சுவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுபாஷின் மாமனார் அவரை கொலை செய்ய திட்டமிட்டு இந்த செயலை செய்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் சந்திரன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹாசினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆணவக்கொலை சதியில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student murder in erode for cast issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->