கோவில் சீல் வைத்த விவகாரம்: பக்தர்களின் உரிமையை பறிக்க முடியாது... நீதிபதி அதிரடி தீர்ப்பு!
sangarankovil temple seal order issue
தென்காசி, சங்கரன்கோவில் அருகே இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தடுக்க கோவிலை பூட்டி வருவாய்த்துறை சீல் வைத்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, கோவிலை பூட்டி சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகளின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒரு மனிதரின் வழிபாடு நடத்தும் உரிமையை அரசு அதிகாரிகள் தடை செய்ய முடியாது.
கோயிலைப் பூட்டி வருவாய் துறை வைத்த சீலை உடனடியாக அகற்ற வேண்டும் என வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவிற்கு இடைக்காலை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
sangarankovil temple seal order issue