சினிமாவையும் மிஞ்சிய நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்! தெருவில் கதறி துடித்த 3 வயது குழந்தை.! - Seithipunal
Seithipunal


வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கைநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் வேலவன். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சரண்யா அப்பகுதியில் உள்ள பூ வியாபாரி சிலருக்கு  பூ கட்டிக்கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு அப்பகுதியை சேர்ந்த ரவுடி கணேஷ்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.அதனால் மனமுடைந்த சரண்யா கணவருடன் சென்று போலீசாரின் புகார் அளித்துள்ளார்.

                    

மேலும் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து எந்தநடவடிக்கையும் எடுக்காமல் அசால்டாக விட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று கணேஷ்குமார், வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் சரண்யாவின் வீட்டிற்கு சென்று வேலவனின் ஆட்டோவை அடுத்து நொறுக்கி, சரண்யாவை தாக்க முயற்சி செய்துள்ளான்.
 
மேலும் அவனிடமிருந்து தப்ப சரண்யா குழந்தையை தூக்கிக்கொண்டு தெருவில் உதவி கேட்டு ஓடியுள்ளார். இருப்பினும் அவரை விடாமல் துரத்திய கணேஷ்குமார் சரண்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளான்

பின்னர் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் எந்தவித பதற்றமும் இன்றி வீட்டில் இருந்த கணேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rowdy give sex abuse torture and killed woman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->