அ.தி.மு.க எம்.எல்.ஏ வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்! அதிர்ச்சி சம்பவம்!
robbers in MLA home
தற்போது கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கொள்ளையர்களும் தீவிரமாக கைவரிசை காட்டுகின்றனர்.
இந்த நிலையில்,திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
தத்தமங்கலத்தில் உள்ள அதிமுக எம்எல்ஏவின் பரமேஸ்வரி வீட்டின் பூட்டை உடைத்து நேற்று நள்ளிரவு கொள்ளையர்கள் திருடுவதற்கு முயற்சி செய்துள்ளனர். அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கொல்லலையர்களை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு எம்எல்ஏவின் வீட்டிற்குள் அச்சமில்லாமல் சென்ற கொள்ளையர்களை நினைத்து சாதாரண மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.