உசுரே போயிருக்கும்..? லஞ்சம் கேட்ட போக்குவரத்து காவலர்கள்: ஒன்று கூடி வெளுத்து வாங்கிய வாகன ஓட்டிகள்..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களுக்கு முன் வாடகை கார் ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் வேளச்சேரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவரால் தாக்கபட்டு, மனமுடைந்து சாலையிலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது போன்ற சம்பவங்களால் காவல் துறை மீதான களங்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்லும் நிலையில், சென்னையில் போக்குவரத்து காவலர்கள் 100 ரூபாய் லஞ்சம் கேட்டு இளைஞரை தாக்கிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இளைஞரிடம் 100 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் தர மறுத்ததால் அவர்களை ஆய்வாளர் தாக்கியதாக கூறி அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தின் போது தன்னை வீடியோ எடுக்கிறார்கள் என்று தெரிந்ததும், செல்போனை பறிக்க முயல்கிறார் ஒரு காவலர்.

இருந்தாலும் பொதுமக்களில் ஒருவர் துணிச்சலாக போக்குவரத்து உதவி ஆய்வாளரின் இரு கைகளையும் பின்னால் இருந்து பிடித்து கொண்டு இப்போது போட்டோ எடுங்கள் என்கிறார்.

இப்படி தங்கள் மீது பொதுமக்கள் கடுமையாக நடந்து கொண்ட போதிலும் போக்குவரத்து காவலர்களால் வாய் கூட திறக்க முடியவில்லை.

காவலர்கள் தங்கள் மீது தவறில்லை என்றால் நிச்சயம் அவர்களை சும்மா விட்டிருக்க போவதில்லை. தங்கள் தரப்பில் தவறு இருந்த காரணத்தினாலேயே இவ்வளவு நடந்தும் சும்மா இருந்திருக்கின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் 100 ரூபாய் கேட்டதாகவும் போடப்பட்டிருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pulled over by Traffic Police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->