தனது 2 வயது மகனுடன், ரயிலில் சிக்கி சிதைந்துபோன கர்ப்பிணி .! வெளியான அதிரவைக்கும் பின்னணி.!
தனது 2 வயது மகனுடன், ரயிலில் சிக்கி சிதைந்துபோன கர்ப்பிணி .! வெளியான அதிரவைக்கும் பின்னணி.!
கோவை மாவட்டம், ரத்தினபுரி தில்லைநகர் ரயில்வேகேட் அருகே ஒரு கர்ப்பிணி பெண்ணும், 2 வயது குழந்தையும் விபத்துக்குள்ளாகி, உடல் சிதறி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது .
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிதைந்து கிடந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் அங்கு கிடந்த, அந்த பெண்ணின் செல்போனை கைப்பற்றி அதிலிருந்து உறவினர் எண்ணுக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் விவரமறிந்து ஓடிவந்த அவருடைய சகோதரியிடம் இறந்த பெண் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது .
அதில் கோவை சின்னத்தடாகத்தை சேர்ந்தவர் மகேஷ்வரி, இவரது கணவர் தனபால். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.மேலும் மகேஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார் என தெரியவந்தது.
மேலும் கடந்த சில நாட்களாகவே மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் மகேஸ்வரி கோபித்துக்கொண்டு தனது 2 வயது மகனுடன் அவரது அம்மாவின் வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலையும் அங்கு வந்த அவரது கணவன், மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த மகேஸ்வரி, தனது துணிகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய 2 வயது குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியில் புறப்பட்டுள்ளார் என்பதும் விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
pregnant lady dead with 2 year son in train track