கணவனை சரமாரியாக அடித்து உதைத்த மனைவி..! திருமணமாகி 5 நாட்கள் தான் ஆகின்ற நிலையில் கோவையில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


வேறொரு பெண்ணுடன் உறவு வைத்துள்ளதை மறைத்து புதியதாக திருமணம் செய்துக்கொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் பொதுமக்கள் நடுவில் வைத்து அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

கோவையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு, புது திருமண ஜோடிகள் சென்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 5 நாட்கள் தான் ஆகின்றது. இந்நிலையில் கோயிலை உள்ள போது கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 
அந்த பெண்ணின் கணவர் கையில் இன்னொரு பெண்ணின் பெயர் பச்சைகுத்தி இருப்பதை பார்த்த உடனே, கோவிலின் வாசலில் வைத்து கணவரை சரமாரியாக அடித்து துவைத்துள்ளார் அவரின் மனைவி.  

இந்நிலையில் இவர்கள் கோவை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்றும் தகவல் வந்துள்ளது. 

 
மேலும், அந்த இளைஞருக்கு ஏற்கனவே  ஒரு திருமணமாகி,மறைத்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.   இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் கணவரை சரமாறியாக தாக்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரையும் சமாதானம்  வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.  இந்த நிகழ்வு பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Newly Marriage Couples Going to Koil After Fight


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->