திருநெல்வேலியில் திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லியில் திருவள்ளுவர் கழகத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக சுத்தமல்லியில் பெட்ரோல் பங்க் நிர்வாகத்துடன் இணைந்து திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று  அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

அந்த அறிவிப்பின் படி, இன்று சுத்தமல்லி பங்கில் 50 திருக்குறள் ஒப்புவிப்பவர்களுக்கு ரூ.100-க்கு பெட்ரோலும், 30 திருக்குறள் ஒப்புவித்தால் ரூ.50-க்கு பெட்ரோலும் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட சுத்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் அங்கு திரண்டு வந்து திருக்குறளை ஒப்புவித்தனர். அவர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சார்பில் ரூ.100-க்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது. 

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுத்தமல்லி திருவள்ளுவர் கழக தலைவர் சொக்கலிங்கம் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி உலக பொதுமறையை கற்றுக் கொடுக்கும் திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு முன்னெடுப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு, இலக்கியவாதிகள் இடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirunelveli petrol free if peoples told Thirukkural in bunk


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->