மூன்றாவது காதலனை போட்டுத்தள்ளிய முதல் இரண்டு காதலர்கள்.! நாகமல்லேஸ்வரியின் பலே வேலை.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் குண்டூர் பகுதியைச் சேர்ந்த நாக மல்லேஸ்வரிக்கு திருமணமாகி சில நாட்களில் கணவர் இறந்துவிட்டார். இதனால் அவர் தனது உறவினர் வீட்டில் இருந்து வந்துள்ளார். வறுமையின் காரணமாக மல்லேஸ்வரி ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். 

அப்பொழுது கடப்பா பகுதியைச் சேர்ந்த பாட்ஷாவும் அங்கே வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக இருக்கிறது. பின்னர் இந்த காதல் எல்லை மீறிச் சென்றுள்ளது.

அடிக்கடி இருவரும் நெருக்கமான தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இருவரும் வீடு எடுத்து ஒன்றாக திருமணம் செய்யாமல் லிவின் டுகெதராக வாழ்ந்து வந்துள்ளனர். அப்பொழுதுதான் மல்லேஸ்வரியின் பல்வேறு முகங்கள் பாஷாவுக்கு தெரியவந்துள்ளது. ஏற்கனவே அவருக்கு இரு ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதை நேரடியாக மல்லேஸ்வரியிடம் கேட்டு பாஷா கண்டித்துள்ளார். இருப்பினும் அந்த இரண்டு ஆண் நண்பர்களையும் அவர் கைவிட மறுத்துள்ளார். இதனால் பாஷா மிகுந்த ஆத்திரம் அடைந்து தகராறு செய்துள்ளார். எனவே அவரை தீர்த்துக்கட்ட மல்லேஸ்வரி முடிவு செய்துள்ளார். 

தனது இரண்டு காதலர்களிடமும் இதுகுறித்து மல்லேஸ்வரி தெரிவிக்க அமைரா, சுப்பாராவ் ஆகிய இருவரும் கடந்த 3ஆம் தேதி ரயில் நிலையத்திற்கு பின் சென்று பாஷாவுடன் மது அருந்தியுள்ளனர். பின்னர் அவர் மிகுந்த போதைக்கு ஆளானதும் அவரை கழுத்தை நெரித்து கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் இரு ஆண் நண்பர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagamalleswari kill Third lover using 2 lovers


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->