மதுரையில் நடந்த கொடூரம்! மனைவியை தொழிலுக்கு அனுப்பிய நண்பனை போட்டுத்தள்ளிய கணவன்! - Seithipunal
Seithipunal


மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 56). இவர் ஆட்டோ டிரைவர். இவரது இரண்டாவது மனைவியின் பெயர் ஆனந்தி (வயது 40). மதுரை ரயில் நிலையத்தில் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கிறார். மேலும், பணத்திற்காக, தன் மனைவி ஆனந்தியை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தார். 

இதற்கிடையே, மதுரை ரயில் நிலையத்தில், பிச்சை எடுத்துக் குடும்பத்துடன் வாழ்ந்து கெண்டிருந்தார் மாரியப்பன் (வயது 46). இவரது மனைவியின் பெயர் செண்பகவள்ளி.     கருப்பையா, மாரியப்பனிடமும், அவரது மனைவி, செண்பகவள்ளியிடமும் நெருங்கிப் பழகினார். தன் மனைவியை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதைப் போல, மாரியப்பனின் மனைவியையும் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தி உள்ளார் கருப்பையா.

துவக்கத்தில், இதற்கு செண்பகவள்ளி மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், கருப்பையா, இந்த விவகாரத்தை, அவரது கணவர் மாரியப்பனுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வதாகக் கூறி உள்ளார். இதற்கு சம்மதித்த செண்பகவள்ளி, கருப்பையா சொன்ன ஆட்களுடன் பாலியல் தொழில் செய்து வந்தார். அந்த சமயங்களில், மாரியப்பனுக்கு, மதுவை அதிக அளவில் ஊற்றிக் கொடுத்து விடுவாராம் கருப்பையா.

ஆனாலும், நாளடைவில், இந்த விவகாரம், மாரியப்பனுக்குத் தெரிய வந்தது. நேற்று முன் தினம், இரவில், மதுரை ரயில் நிலைய பூங்காவில், மாரியப்பனும், கருப்பையாவும் மது அருந்தி போதையில் இருந்தனர். அப்போது, மாரியப்பன், “என் மனைவியை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி விட்டாயே” என்று சொல்லி, பெரிய கல்லை எடுத்து, கருப்பையாவின் தலையில் போட்டுக் கொன்று விட்டார். போலீசார், மாரியப்பனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man killed his friend for his wife involve in business


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->