நகைக் கடையில் திடீர் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் தெற்குமாசி வீதியில் உள்ள நகைக்கடையில் நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்றது. அப்போது திடீரென இரவு 8 மணியளவில் நகைக்கடையின் முதல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

இதை பார்த்த கடை உரிமையாளரின் மருமகன் மோதிலால் தீயை அணைப்பதற்காக முதல் தளத்திற்கு விரைந்து சென்றார். ஆனால், அப்போது தீ வேகமாக பரவியதால் அவரால் கீழ்தளத்திற்கு செல்லமுடியவில்லை. 

இதற்கிடையே, கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவம் தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு, நகைக்கடைக்குள் சிக்கிக்கொண்ட மோதிலாலை கடைக்குள் சென்றனர். 

அங்கு அவர் ஒரு அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை கண்ட மீட்புக்குழுவினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மோதிலாலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died jwellery shop fire accident in madurai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->