அக்காவிடம் தவறாக நடந்த வாலிபர் - ஆத்திரத்தில் தம்பி செய்த அதிர்ச்சி செயல்.!
man attack youth for harassment to sister in thiruvallur
திருவள்ளூர் மாவட்டம் கண்ணதாசன் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர்கள் ராபர்ட் - வனிதா தம்பதியினர். இவர்களுக்கு யஸ்வந்த் என்ற மகனும், அஸ்வினி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், ராபர்ட் நேற்று காலை தனியார் நிறுவனத்துக்கு வேலை சம்பந்தமாக சென்றுள்ளார். அங்கு அவர் 'லிப்டில்' வந்த இளம்பெண்ணிடம், தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து ராபர்ட்டை வரவழைத்து விசாரணை செய்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இருவரும் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கு வந்த பாதிக்கபட்ட பெண்ணின் தம்பி மவுலி "எனது அக்காவிடம் தவறாக நடக்க முயன்றாயா?" எனக் கூறி ராபர்ட்டின் தலையில் கையால் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் ராபர்ட் நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். இதைபார்த்த மவுலி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக ராபர்ட்டை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மவுலியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அக்காவிடம் தவறாக நடக்க முயன்ற ஆடிட்டரை தம்பி அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man attack youth for harassment to sister in thiruvallur