மயிலாடுதுறை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - புகாரில் சிக்கிய மதபோதகர்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம் திருவாளப்புத்தூர் புத்தகரம் மேலத்தெருவை சேர்ந்த விஜயேந்திரன் என்பவர், அதேபகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் மதபோதகராக உள்ளார். இவரது சபைக்கு வந்து செல்லும் ஒரு பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனால், அவரது காலில் அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சபைக்கு வந்த அந்த பெண் தனது காலில் வலி அதிகமாக உள்ளது என்று மதபோதகர் பிலிப் விஜயேந்திரனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் வலி நிவாரணி எண்ணெய் தேய்த்தால் சரியாகி விடும் என்று கூறி தனது வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வீட்டின் கதவை பூட்டிய விஜயேந்திரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், நடந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இருப்பினும், அந்த பெண் சம்பவம் குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் முடிவில் போலீசார் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்து விஜயேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for harassment in mayiladuthurai thiruvalapuththur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->