டிபன் பாக்ஸ் குண்டுவீச்சு: போலீசார் விசாரணை! மதுரையில் பரபரப்பு!
Madurai tiffin box bomb
மதுரை, மேலூர் அருகே கீழவளவு பகுதியில் நவீன் குமார் என்பவர் மீது இன்று அதிகாலை முன் விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டுள்ளது.
இதில் நவீன்குமார் மற்றும் அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் இருவரும் காயமடைந்தனர். டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு காரணமாக கையில் காயமடைந்த நவீன் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து டிபன் பாக்ஸ் குண்டு வீசி அவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.