மதுரை கோர விபத்தின் பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று விட்டு இன்று அதிகாலை திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சிவரக்கோட்டை அருகே நான்கு வழிச்சாலையை பாண்டி என்ற கொய்யாப்பழம் வியாபாரி தனது இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்றார். 

அப்போது டூவீலர் மீது மோதிய கார் அருகில் இருந்த பேரிகார்ட் மீது மோதி அந்தரத்தில் பறந்து எதிர்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கனகவேல், அவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி அவருடைய குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சாலை கடக்க முயன்ற கொய்யா வியாபாரி பாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணம் செய்த மேலும் 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில் கார்கில் பயணம் செய்த 8 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai accident death toll increased to six


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->