மாணவர்கள் கவனத்திற்கு.. சட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க.. இன்றே கடைசி நாள்.!
Law education apply Last day of today
நடபாண்டிற்கான ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால சட்டப்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
தமிழகத்தில் சட்டப் படிப்பு 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு என இரு நிலைகளில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதில், 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் 5 ஆண்டு படிப்பையும், பட்டப்படிப்பை முடித்தவர்கள் 3 ஆண்டுகள் சட்டப்படிப்பையும் படிக்க படித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 5 ஆண்டு சட்டப்படிப்பு படிப்பில் சேர்வதற்கு மே 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் நடப்பாண்டிற்கான 5 ஆண்டு கால சட்டப் படிப்புகளில் சேர்வதற்கு மே 15ம் தேதி தொடங்கிய விண்ணப்பம் மே 31ம் தேதி மாலையுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று (ஜூன் 10ம் தேதி) வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://tndalu.ac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
English Summary
Law education apply Last day of today