தண்ணீர் பிரச்சனையால் வாலிபருக்கு நேர்ந்த சோகம்!
தண்ணீர் பிரச்சனையால் வாலிபருக்கு நேர்ந்த சோகம்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம் தவிழ்த்தான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தரமூர்த்தி (வயது 29). இவரது நண்பன் கவுதம். கவுதமுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (வயது 25) என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் அம்மன் கோயில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து சுந்தரமூர்த்திக்கும் அதே தெருவில் வசித்து வரும் ஈஸ்வர மூர்த்திக்கும் பொதுச் சுவர் பிரச்சினை மற்றும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சினையும் இருந்து வந்தது.
இந்நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தரமூர்த்தியை ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் இன்று அதிகாலை வீடு புகுந்து கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து வன்னியம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரமூர்த்தியைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஈஸ்வர மூர்த்தியின் நண்பர்கள் தங்கபாண்டி மற்றும் சர்க்கரை ராஜ் ஆகியோரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.