மீண்டுமா... செந்தில் பாலாஜி வீட்டில் ED ரெய்டு!
Karur Senthil Balaji house ED raid
கரூர், ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி என் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
இந்த சோதனையில் 5 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் கிடைத்துள்ள புதிய தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 8 மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Karur Senthil Balaji house ED raid