வேலூரில்., கள்ளகாதலன்களுக்குள் நடந்த தகராறு.!! ஆள் வைத்து துண்டு துண்டாக வெட்டி எரிந்து மிளகாய்ப்பொடி போட்ட சோகம்.!!
in vellore a man killed due to illegal affair
வேலூர் மாவட்டத்தில் இருக்கும் திருப்பத்தூரை அடுத்துள்ள ஏ.கே.மோட்டூர் பகுதியை சார்ந்தவர் சிவகுமார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி ஒருவர் உள்ளார். இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
அதே பகுதியை சார்ந்த இளம் பெண் முருகேஸ்வரி., இவருடைய கணவர் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் அங்குள்ள கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
முருகேஸ்வரிக்கும் சிவகுமாருக்கும் இடையே கடந்த வருடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளகாதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில்., நேற்று ஜோலார்பேட்டையில் இருக்கும் இரயில் நிலையத்தில் முருகேஸ்வரியை இறக்கிவிட்டு., பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் இல்லத்திற்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
அந்த சமயத்தில் அவரை இடை மறித்த மர்மநபர்கள்., முகத்தில் மிளகாய் பொடியை தூவிவிட்டு., சரமாரியாக வெட்டி இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டனர். மேலும்., அவரின் மர்ம உறுப்பை அறுத்தெடுத்து.., கல்லை போட்டு கொடூர முறையில் கொலை செய்து சம்பவ இடத்தில இருந்து தப்பியோடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., புதுப்பூங்குளம் கிராமத்தை சார்ந்த பழனி இவருடன் முருகேஸ்வரி ஏற்கனவே முறையற்ற பழக்கத்தை வைத்திருந்ததும்., சுமார் 3 வருடங்களுக்கு முன்னதாக இருவரும் கணவன் - மனைவி போல் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும்., பழனி பணிக்காக வெளியூருக்கு சென்ற சமயத்தில் சிவகுமாருக்கும் முருகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஊருக்கு திரும்பிய பழனிக்கு இந்த பழக்கம் தெரியவரவே., இருவரையும் கண்டித்ததால்., சிவகுமாருக்கும் பழனிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இதனையடுத்து சிவகுமாரை தீர்த்து கட்ட முடிவு செய்து பழனி சமயம் நோக்கி காத்து கொண்டு இருந்த நேரத்தில்., முருகேஸ்வரியை திருப்பூர் இரயில் ஏற்றிவிட சிவகுமார் ஜோலார்பேட்டை இரயில் நிலையத்திற்கு வந்திருப்பதை அறிந்து கூலிப்படையை வைத்து கொலை செய்தது தெரியவந்தது.
English Summary
in vellore a man killed due to illegal affair