வேலூரில்., கணவன் மது போதையில் சாலையில்., மனைவி வீட்டில் கள்ளகாதலனுடன் கொண்டாட்டம்.!! மது பழக்கத்தால் நடந்த நம்பிக்கை துரோகம்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் இருக்கும் பலவன்சாத்துக்குப்பம் பாரதிநகர் பகுதியை சார்ந்தவர் வெங்கட்யுவராஜ் (28). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 
இவருடைய மனைவியின் பெயர் கோமதி (வயது 23). இவர் அங்குள்ள மருந்துக்கடையில் பணியாற்றி வந்தார். கடந்த 2017 , வருடத்தில் நவம்பர் மாதத்தில் வெளியேறிய பின்னர் வீட்டிற்கு மீண்டும் வரவில்லை. 

இதனையடுத்து கணவரை காணவில்லை என்று மனைவி கோமதி., காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., அவரது நண்பர்கள் மற்றும் பணியாற்றிய நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டும் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில்., கோமதியுடன் பணியாற்றிய ராஜ்குமார் (வயது 40) என்பவர் வெங்கட்டை கொலை செய்தது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில்., கள்ளக்காதல் விவகாரத்தால் வெங்கட் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும்., இந்த கொலை சம்பந்தமாக கள்ளக்காதலன் ராஜ்குமார்., ஆரணியை சார்ந்த செந்தில் (வயது 33)., வேலு (வயது 32)., கோடிஸ்வரன் (வயது 38)., விஜய் (வயது 23) மற்றும் கோமதி ஆகியோரை கைது செய்தனர். 

கோமதி மௌர்ந்தகத்தில் பணியாற்றி வந்த நேரத்தில்., ராஜ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கோமதியின் கணவர் இல்லாத சமயத்தில் ராஜ்குமார் அடிக்கடி கோமதியின் இல்லத்திற்கு சென்று வரும் வழக்கத்தை வைத்துள்ளார். இதனை சில நாட்கள் கழித்து மனைவியின் நடவடிக்கைகளில் அறிந்து கொண்டார். 

இதன் காரணமாக அவரை பணிக்கு அனுப்பாமல்., அவரது அலைபேசியையும் அனைத்து வைத்துள்ளார். இதனை தனது கள்ளக்காதல் ராஜ்குமாருக்கு கோமதி தெரிவிக்கவே., அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து., கள்ளகாதலியின் மூலமாக வெங்கட்டிற்கு மது அருந்தும் பழக்கத்தை அறிந்துள்ளார். அவரை வேலூரில் இருக்கும் மதுபான கடையில் பார்த்து பேச்சு கொடுக்க துவங்கியுள்ளனர். 

அந்த நேரத்தில்., ராஜ்குமாரின் நண்பர் செந்தில் இராணுவத்தில் பணியாற்றுவதாகவும்., மது பானங்கள் வழங்குவதாகவும் கூறி அவருடன் அறிமுகத்தை ஏற்பபடுத்தியுள்ளார். இதனையடுத்து அவரின் நம்பிக்கைக்கு ஆளான வெங்கட் தனது பொழுதை அவருடனே கழிக்க துவங்கினார். சம்பவத்தன்று தனது மனைவியின் செல்ல வார்த்தையை நம்பி மது குடிக்க கிளம்பியுள்ளார். 

இவர் பணிக்கோ அல்லது மது அருந்தவோ செல்லும் சமயத்தில்., கள்ளக்காதலன் ராஜ்குமாரை அழைத்து வீட்டிலேயே உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த பழக்கமானது இரண்டு மாதங்கள் எந்த விதமான சந்தேகமும் இன்றி நடைபெற்று வந்துள்ளது. தினமும் மது வாங்கிக்கொடுக்க அதிக பணம் செலவானதன் காரணாமாக அவரை கொலை செய்ய திட்டமிட்டு மூணாறுக்கு அழைத்துள்ளனர். 

அதன் படி மூணாறு மோர்தானா அணை பகுதியில் இருக்கும் காட்டுபகுதியில் வைத்து அனைவரும் மது அருந்தி கொண்டு இருந்த சமயத்தில்., வெங்கட்டிற்கு மது போதை அதிகமானதுடன் அவரை கழுத்தை நெரித்து கோதை செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் சென்று பார்த்த போது., அங்கு வெறும் எலும்பு கூடுகளை மட்டுமே காண முடிந்தது. 

இது குறித்து கோமதியிடம் மேற்கொண்ட விசாரணையில்., கள்ளகாதலுக்காக கணவரை கொலை செய்ததற்கு ஒத்துழைப்பு தந்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இவர்கள் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore a husband killed by her wife and illegal affair boy friend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->