ரூ.200 கடனுக்காக கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டமுதியவர்.!! வெளியான அதிர்ச்சி சம்பவம்.!!
in Chennai a man killed 200 rupees loan
சென்னையை அடுத்துள்ள கோவிலம்பாக்கத்தில் உள்ள வெள்ளைக்கல் பகுதியை சார்ந்தவர் வேலாயுதம் (62). இவர் அதற்க்கு அருகில் இருக்கும் நன்னமங்கலத்தில் இருக்கும் அரசு மதுபான கடையில் பணியாற்றி வருகிறார். இந்த மதுபான கடையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையை சார்ந்த 23 வயதுடைய வினோத் என்ற வாலிபர் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றியதை தொடர்ந்து வினோத்திடம் வேலாயுதம் ரூ.200 கடனாக பெற்றுள்ளார். இந்த பணத்தை கேட்டு வந்ததற்கு., தந்து விடுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில்., நேற்று இரவு மதுபான கடைக்கு வெளியே இருந்த வேலாயுதத்தை கண்ட வினோத்., பணத்தை தரக்கூறி கேட்டுள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு வளர்ந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த வினோத் அங்கிருந்த உருட்டு கட்டையின் மூலமாக வேலாயுதத்தை தாக்கவே., நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். இதனையடுத்து அவரை மீட்ட வினோத் விபத்தில் காயமடைந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கவே., அவருக்கு சிகிச்சையை மேற்கொண்டு பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து., சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது., அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களில் உருட்டு கட்டையால் தாக்கும் காட்சிகளானது பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த சம்பவமானது தெரியவரவே., காவல் துறையினர் வினோத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சூழ்நிலையில் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று கொண்டு வந்த வேலாயுதம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in Chennai a man killed 200 rupees loan