குழந்தை இல்லாததால் கொடூரனாக மாறிய கணவன்! அம்பலமான உண்மையால் துடிதுடித்துப்போன பெற்றோர்கள்!!
HUSBAND KILLED WIFE FOR NO BABY
டெல்லியை சேர்ந்தவர் விஜேந்திர குமார். இவருக்கும் சுனிதா என்ற பெண்ணிற்கும் கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியும் சுனிதாவிற்கு குழந்தை பிறக்கவில்லை. மேலும் இதற்காக அவர்கள் கோவில், கோவிலாக சுற்றியும், பல மருத்துவங்களை மேற்கொண்டும், எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து விஜேந்திர குமார், சுனிதாவிடம் விவாகரத்து கேட்டுள்ளார் . ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் விஜேந்திர குமார். மேலும் அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் அவருக்கும் சுனிதாவிற்கு அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில் விஜேந்திர குமார் சுனிதாவை அடித்து கொலை செய்துள்ளார் பின்னர் தனது மனைவி மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என கூறி அருகில் இருந்தவர்களையும் நம்ப வைத்துள்ளார்.
ஆனால் இது குறித்து சுனிதாவின் தாயார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில் விவாகரத்து செய்ய சுனிதா மறுத்ததால் அவரை விஜேந்திர குமார் மற்றும் இரண்டாவது மனைவி கொடுமை செய்துள்ளனர் . அதனை சுனிதாவே தன்னிடம் கூறியுள்ளார். மேலும் சுனிதாவை அவர்கள் அடித்தே கொலை செய்துள்ளனர் எனவும் புகார் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டதில் உண்மைகள் அம்பலமானது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
HUSBAND KILLED WIFE FOR NO BABY