கனமழை எதிரொலி: 3 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!
heavy rain national disaster response force rushed
தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழை பெய்கிறது.
குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்து சென்றுள்ளது.
தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 100 பேர் கொண்ட நாலு குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் 3 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது.
English Summary
heavy rain national disaster response force rushed