கனமழை பரிதாபம்: வீடுகள் இடிந்து 2 பேர் உயிரிழப்பு!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை நகர பகுதி சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. 

இந்நிலையில் திருநெல்வேலியில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாளையங்கோட்டையில் கனமழை பெய்து வருவதால் சிவக்குமார் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. கட்டிட  இடைபாடுகளில் இருந்து சிவக்குமாரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

இதே போல் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியின் வீடு இடிந்து விழுந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain house collapsed 2 killed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->