மணிப்பூர் | தொடரும் கலவரம்... 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு!  - Seithipunal
Seithipunal



இந்திய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து மணிப்பூர் உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடந்த 26 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மணிப்பூரின் வாக்குச்சாவடியில் வன்முறை நடைபெற்றதை அடுத்து மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங்க, ஒயினாம் உள்பட 6 வாக்கு சாவடிகளில் வருகின்ற 30 ஆம் தேதி மறுவாக்கு பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவின் போது பல வன்முறை சம்பவங்கள் பதிவாகி இருந்ததால் ஏப்ரல் 22 ஆம் தேதி உள் மணிப்பூர் தொகுதியில் 11 வாக்கு சாவடிகளில் மறுவாக்கு பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிப்பு வருகின்ற ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur Re voting 6 polling stations


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->