கனமழை எதிரொலி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நாளை காலை 10 மணி அளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த குறைதீர்க்க கூட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain Farmers grievance meeting postponed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->