கனமழை எதிரொலி: சென்னையில் 2 பேர் பலி!
heavy rain Chennai 2 dead
இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வங்ககடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருவேறு இடங்களில் கனமழை காரணமாக மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அசோக் நகர் சாலையில் மணிகண்டன் (வயது 23) என்பவர் செல்போன் பேசிக்கொண்டிருந்தபடி சென்ற போது பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போன் கருகி உள்ள நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்தாரா அல்லது மின்சாரம் தாக்கியதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் தி. நகரில் கனமழைக்காக மின் கம்பம் அருகே ஒதுங்கிய 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மின்கம்பத்தோடு ஒட்டிய நிலையில் இருந்த சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
heavy rain Chennai 2 dead