கனமழை எதிரொலி: சென்னையில் 8 விமானங்கள் ரத்து!
Heavy rain 8 flights canceled in Chennai
இலங்கையை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளின் மழைநீர் தேங்கியுள்ளது.
அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மீனம்பாக்கத்தில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அந்தமான், ஹைதராபாத், டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் உட்பட 15 விமானங்கள் காலதாமதமாக இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Heavy rain 8 flights canceled in Chennai