பள்ளி மாணவிகளை சீரழிக்க நினைத்த தலைமை ஆசிரியர்.! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் தமிழக காவல்துறை.!!
பள்ளி மாணவிகளை சீரழிக்க நினைத்த தலைமை ஆசிரியர்.! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் தமிழக காவல்துறை.!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில், அரசு உயர் நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை, 296 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
தலைமை ஆசிரியர், 6 ஆசிரியைகள், ஆசிரியர்கள் என 15 பேர் இந்தப் பள்ளியில் பணி புரிகின்றனர். நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லுாரைச் சேர்ந்த முருகேசன் (வயது 52) என்பவர், இங்கு தலைமை ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.
இவர், 8,9,10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியர்களை, தன் அறைக்கு வரவழைத்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை, மற்ற ஆசிரியர்களிடமோ, பெற்றோர்களிடமோ கூறினால், தொலைத்து விடுவேன், டி.சி-யைக் கொடுத்து விடுவேன், என்று மிரட்டி உள்ளார்.
இருப்பினும், பாலியல் தொல்லை அடைந்த மாணவிகள், தங்கள் பெற்றோர்களிடம் இது பற்றி, புகார் கூறி உள்ளனர்.
இதனைக் கேள்விப்பட்ட, மாணவிகளின் பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்து, நேற்று நுாற்றுக்கும் அதிகமானோர், பள்ளிக்குச் சென்று, தலைமை ஆசிரியர் முருகேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவலை அறிந்த, ராஜபாளையம் வடக்கு காவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், மற்றும், தாசில்தார் ராமச்சந்திரன், கல்வி அதிகாரி சர்வேஸ்வரன் ஆகியோர், பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், மாணவிகளின் பெற்றோரிடம், இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இருந்தாலும், அவர்கள் அரை மனதாக, கலைந்து சென்றனர்.
அதன் பிறகு, நேற்று மதியம், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், தாலுகா அலுவலகம் எதிரே கூடினர். இவர்களுடன், சோமையாபுரம் பகுதியில் வசித்த மக்களும் சேர்ந்து கொண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ், நடவடிக்க வேண்டும், அவரைக் கைது செய்ய வேண்டும், என்று கோஷம் போட்டனர். இதனால், போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து, அவர்களைப் புகார் அளிக்குமாறு கூறினர். பின், நடவடிக்கை எடுப்போம், என்றனர்.
இதனால், எரிச்சல் அடைந்த மக்கள், போராட்டத்தை தொடர்ந்தனர். போலீஸ் , தலைமை ஆசிரியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகன்றனர், இது மர்மமாக உள்ளது, எனவும் அவர்கள் பேசிக் கொண்டனர்.
English Summary
HEAD MASTER DO SEXUAL TORTURE IN SCHOOL GIRL