மதுபானக்கடையாக மாறிய வணிக வளாகம்! மக்கள் விடுத்த அதிரடி கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


தஞ்சை பூக்கார தெருவில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த வணிக கட்டிடம் பழுதடைந்ததால் அங்கு அமர்ந்து வியாபாரம் செய்ய மீன்வியாபாரிகள் மிகவும் அச்சப்பட்டனர்.

இந்நிலையில் கட்டிடம் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டு ரூ.30 லட்சம் மதிப்பில் மீன்கள், ஆட்டுக்கறி, கருவாடு போன்ற பொருட்கள் வியாபாரம் செய்யும் இறைச்சி வணிக வளாகம் கட்டப்பட்டது. மேலும் அங்கு ஆழ்குழாய் கிணறு, கழிப்பறை வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் கட்டிடம் கட்டி 5 ஆண்டுகள் ஆன நிலையிலும் பெயர் வைக்கும் பிரச்சினையால்  இன்னும் திறக்கப்படவில்லை.இந்நிலையில் இந்த வணிக வளாகம் திறந்தவெளி மதுபான கூடமாக செயல்பட்டு வருகிறது.

 டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு சிலர் வணிக வளாகத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர் . மேலும் மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பேப்பர் கப்புகளை அங்கே போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.

மேலும் இந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் அந்த வழியாக மக்கள் சென்று வருவதற்கே பெருமளவில் அச்சப்படும் நிலையில் அந்த கட்டிடம் திறக்கப்பட்டு நடைமுறைக்கு வரவேண்டும் எனவும், இதை திறக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் எனவும் மக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fish market changed as a tasmac bar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->