சேலத்தில் பரபரப்பு - அதிமுக பிரமுகர் வீட்டில் தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


சேலத்தில் பரபரப்பு - அதிமுக பிரமுகர் வீட்டில் தீ விபத்து.!

சேலம் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே அத்வைத ஆசிரமம் சாலையில் அதிமுக நிர்வாகி துரை புவனேஸ்வரன் என்பவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். 

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். அதன் படி பெயிண்ட் அடிக்க வந்த பணியாளர்கள் வீட்டிலிருந்த பழைய பொருட்களை மாடியில் உள்ள தகர அறையில் போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர். 

இந்த நிலையில் பெயிண்டர்கள் தேவையில்லாத பழைய புத்தகங்களை மாடியில் வைத்து எரித்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக தீப்பொறி பறந்து, அந்த சிறிய அறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது சரசரவென பற்றி எரியத் தொடங்கியது. 

இதனைப்பார்த்த, பணியாளர்கள் பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் உடனடியாக சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் படி விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தண்ணீரை அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிமுக பிரமுகர் வீட்டில் நடைபெற்ற இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கவனமுடன் கையாள வேண்டும் என்றும் குப்பை உள்ளிட்ட பொருட்களை எரிக்கும்போது காற்றில் பரவாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in salem admk excuetive house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->